ராமேஸ்வரத்தில் ஜெயேந்திரர்
ராமேஸ்வரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராமேஸ்வரம் வந்தார். அவருக்கு அவருக்கு சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் வடக்கு, தெற்கு கோபுரங்கள் கட்டுமான திருப்பணி கால்கோள் விழாவில் கலந்து கொள்வதற்காக காஞ்சிஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராமேஸ்வரம் வந்தார். அவருக்கு ராமேஸ்வரம் கோவிலில், திருப்பணி குழு சார்பில் கும்ப மரியாதை செய்து வரவேற்புஅளிக்கப்பட்டது.
அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் வாணவேடிக்கை, அதிர்வேட்டுக்களுடன் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.லட்சுமணதீர்த்தம் அருகில் ராமேஸ்வரம் மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பொன்னாடைகளும், மலர் கிரீடமும்அணிவிக்கப்பட்டன.
நான்கு ரத வீதிகள் வழியாக, காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் பெண்களும், குழந்தைகளும் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றனர்.ராமேஸ்வரம் முஸ்லீம் ஜமாத் சார்பிலும், ஜெயேந்திரருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் ஞான தேசிக சுவாமிகள், கோவில் இணை கமிஷனர் பக்கிரி சாமி, அறங்காவலர் குழுத் தலைவர் குமரன் சேதுபதி, பாஜகதலைவர் முரளிதரன், பிராமண சங்கத் தலைவர் சுந்தர், முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவருடன்,ஊர்வலமாக வந்தனர்.












Click it and Unblock the Notifications