சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
சென்னை:
திருநெல்வேலியில் 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மோகன் கமிஷன் அறிக்கையை சட்டசபையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி திங்கள்கிழமை கிழித்து எறிந்தார்.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஊர்வலம்நடைபெற்றது.
கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 17 பேர் ஆற்றில் விழுந்துஇறந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன்தனது விசாரணையை முடித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஊர்வலம்நடைபெற்றது. கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 17 பேர் ஆற்றில்விழுந்து இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன்தனது விசாரணையை முடித்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையை சட்டசபையில் அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அறிக்கையில் போலீஸார் நடத்திய தடியடி நியாயமானது என்றும்,இறந்தவர்கள் 17 பேரும் தவறாக வழி காட்டப்பட்டு விட்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி சபையில் வலியுறுத்தினார். ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்தார்.இதையடுத்து கமிஷன் அறிக்கையை கிழித்தெறிந்து விட்டு சபையை விட்டு வெளிநடப்புச் செய்தார் கிருஷ்ணசாமி.