வாக்குகளை கையால் எண்ணலாமா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை
டல்ஹெளசி (அமெரிக்கா):
புளோரிடா மாநிலம் பாம் பீச் கவுன்டியில் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பதிவானவாக்குகளை கையால் எண்ணுவதை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் தொடரப்பட்டுள்ளவழக்கில், ஜனநாயகக் கட்சியினர் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரின் செய்தித்தொடர்பாளர் டாக் ஹாட்டவேஇதுகுறித்துக் கூறுகையில், மக்களால் போடப்பட்ட வாக்குகளை எண்ணக் கூடாது என்றுகூற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இதை எங்களது வாதத்தில் எடுத்து வைப்போம்என்றார்.
பல்வேறு குழப்பம் காரணமாக அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் குழப்பம்ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். புளோரிடா மாநிலம் பாம் பீச் உள்பட சிலபகுதிகளில் வாக்குச் சீட்டுக்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்துபாம்பீச் உள்ளிட்ட சில கவுன்டிகளில் பதிவான வாக்குகளை கையால் எண்ணஉத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ் வில்லியம் புஷ் ஜூனியர் சார்பில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாக்குகளை கையால் எண்ண உத்தரவிட்டால்அது ஜனநாயகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று புஷ் தனது மனுவில்கூறியிருந்தார். புஷ் தவிர, துணை அதிபருக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் செனி மற்றும்7 வாக்காளர்கள் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
மியாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் ஞாயிற்றுக்கிழமை காலைஉள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
புளோரிடா மாநிலத்திலிருந்து 25 ஓட்டுக்கள் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே அதிபர்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே புஷ்ஷும், கோரும்சட்டரீதியாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்து, நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை.கோருக்கும், புஷ்ஷுக்கும்இந்த வாக்குகள் இன்னும் கிடைக்கவில்லை. ஒட்டு மொத்தவாக்குகள் எண்ணிக்கையில், கோர் லேசான முன்னிலையில் இருக்கிறார். ஆனால்புளோரிடா மாநில வாக்குகள் எண்ணிக்கையில், புஷ் சில நூறு ஓட்டுக்கள் முன்னிலையில்இருக்கிறார். இதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
புளோரிடா மாநில தேர்தல் சட்டப்படி, இரு வேட்பாளர்களுக்கும் இடையே மிகக் குறைந்தவாக்குகளே வித்தியாசம் இருந்ததால், வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications