அத்வானியை அணுகியது கர்நாடகம்
பெங்களூர்:
பெங்களூர் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை, கர்நாடக காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூனகார்கே சந்தித்துப் பேசி, நடிகர் ராஜ்குமாரை விரைவில் மீட்க தமிழக அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த கனக ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர் பெங்களூர் வழியே டெல்லி சென்றார்.
அவரை கர்நாடக கர்நாடக காவல்துறை அமைச்சர் கார்கே பெங்களூர் விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் அத்வானியும், கார்கேயும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர். அப்போது, கார்கே, வீரப்பனால் கடத்தப்பட்டநடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக இரு மாநில அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
பின்னர் நடிகர் ராஜ்குமாரை மீட்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும் என்றும், இதற்குமத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அத்வானியிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த அத்வானி, ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சுநடத்தியிருக்கிறேன். மேலும் வலியுறுத்துகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications