வந்தது வீரப்பன் கேசட்
சென்னை:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரைக் மீட்கநெடுமாறன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் வீரப்பனின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தநேரத்தில் திங்கள் கிழமை இரவு வீரப்பனிடமிந்து ஆடியோ கேசட் ஒன்று "நக்கீரன்பத்திரிகை அலுவகத்திற்கு வந்துள்ளது.
100 நாட்களுக்கும் மேலாக வீரப்பனால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும்நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் நெடுமாறன் உள்ளிட்ட தூதர்கள் ஆறாவதுமுறையாக வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த காட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள்காட்டுக்குள் செல்ல வீரப்பன் சிக்னலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னரே காட்டுக்கு சென்றிருக்கும் நக்கீரன் நிருபர்கள் மூலம் ஆடியோகேசட் ஒன்றை வீரப்பன் கொடுத்திருக்கிறான். அந்த கேசட்டை திங்கள் கிழமை சென்னைநக்கீரன் அலுவககத்திற்கு ஒரு நபர் மூலம் நக்கீரன் நிருபர்கள் கொடுத்தனுப்பி இருந்தனர்.இந்த கேசட் உடனடியாக தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேசட்டில் வீரப்பன் என்ன பேசியிருந்தான் என்பது குறித்த விபரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications