For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.எஸ். அஸ்தி பவானியில் கரைப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

மறைந்த பாரத ரத்னா சி.சுப்ரமணியத்தின் அஸ்தி பவானியில் உள்ள கூடுதுறையில் கரைக்கப்பட்டது.

மரணமடைந்த முன்னாள் தலைவர் சி.எஸ் சின் உடல் தகனம் சென்னையில் நடந்தது. அவரது சிதையிலிருந்து எடுக்கப்பட்ட அஸ்தி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் பவானிக்குக் கொண்டு வரப்பட்டது. இங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது.

அஸ்திக்கு மாவட்ட கலெக்டர் கருத்தையா பாண்டியன், மாவட்ட எஸ்.பி, அசோக்குமார் தாஸ் உள்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அஸ்திக் கலசம் பவானி ஆற்றில் கரைக்க கூடுதுறை என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஐதீக முறைப்படி சடங்குகள்செய்யப்பட்டன. பின்னர் சி.எஸ் சின் மனைவி சகுந்தலா, மகள் அருணா, மகன் ராஜசேகர் ஆகியோர் முறைப்படி அஸ்தியைக் கரைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X