கோபால் எங்கே?
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் சென்றதாக நக்கீரன் கோபால் வீரப்பன் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்கு இன்னும்செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக அவரும் காட்டுக்குக் கிளம்பி, நெடுமாறன் குழுவினர் தலைமலைக் காடடில் சேர்ந்து கொண்டார் என்றுகூறப்பட்டது. ஆனால் நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, வீரப்பனிடமிருந்து அவருக்குஇன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ராஜ்குமார் மீட்பு தொடர்பாக நக்கீரன் கோபால் முதலிலிருந்தே அரசுத் தூதராக காட்டுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். பின்னர் வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளின் கோரிக்கைப்படி நெடுமாறன்தலைமையிலான மூவர் குழுவும், கோபாலுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்றது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுமாறன் குழு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஆனால்இவர்களுடன் கோபால் செல்லவில்லை. அவருக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்றுகூறப்பட்டது. எனவே அவர் சென்னையிலேயே இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை இரவு நக்கீரன் அலுவலகத்திற்கு வீரப்பன் அனுப்பிய ஆடியோ கேசட்வந்தது. அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. கேசட் முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டது. கேசட் வந்ததையடுத்து கோபால் காட்டுக்குக் கிளம்பிச் சென்றதாகவும், தலைமலைக் காட்டில்அவரும், நெடுமாறன் குழுவினரும் வீரப்பன் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் கோபால் இன்னும் காட்டுக்குக் கிளம்பிச் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. நக்கீரன்உதவிஆசிரியர் காமராஜ் இதுகுறித்துக் கூறுகையில், கோபாலுக்கு இன்னும் வீரப்பனிடமிருந்து சிக்னல் வரவில்லை.வந்தால் போவார் என்றார்.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்பரசு மற்றும் நான்கு பேர் அடங்கிய காங்கிரஸ் குழுகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசியுள்ளது. தாங்கள் காட்டுக்குச் செல்லத் தயாராகஇருப்பதாகவும் ராஜ்குமாரை மீட்க தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசுடன் பேசுவதாக கிருஷ்ணாவும், மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும்உறுதியளித்தனர்.
யு.என்.ஐ.