பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கலாம் .. கெய்க்வாட் ஆதங்கம்
தாக்கா:
எனக்கு இன்னும் கொஞ்சம் பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கலாம் என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறியுள்ளார்.
தாக்காவில் நடந்த வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டிதான், இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட்கலந்து கொண்ட கடைசிப் போட்டியாகும். இதையடுத்து போட்டி முடிவில் கேப்டன் கங்குலி மற்றும்இந்தியவீரர்கள் சார்பில் பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்டு கெய்க்வாட் பேசுகையில், இந்திய அணியில் இப்போதுள்ள கட்டுப்பாடு எதிர்காலத்திலும்தொடர வேண்டும். நான் இன்னும் கொஞ்ச காலம் பயிற்சியாளராக இருந்திருக்கலாம்.
வெற்றியுடன் எனது பணியை முடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறை நான் பயிற்சியாளராகநியமிக்கப்பட்டிருந்தபோது, என்னிடம் பல திட்டங்கள் இருந்தது. படிப்படியாக அவற்றை நிறைவேற்ற முடிவுசெய்திருந்தேன். ஆனால் அதற்குள் எனது முதல் கான்டிராக்ட் முடிவு பெற்று விட்டது.
மறுபடியும் கபில் தேவிற்குப் பிறகு மீண்டும் பயிற்சியாளர் ஆனேன். ஆனால் இப்போதும் நீட்டிப்பு தராமல்முடித்து விட்டனர். இருந்தாலும் வருத்தமில்லை. இப்போதுள்ள அணி அப்படியே நீடித்தால் நிச்சயம் வெற்றிகள்குவியும் என்றார்.
கபில் தேவுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் கெய்க்வாட். ஆனால் சில மாதங்களுக்குமுன்பு மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட பல புகார்கள் தொடர்பாக கபில் தேவ் பதவி விலகினார். இதையடுத்துகெய்க்வாட் மீண்டும் பயிற்சியாராக நியமிக்கப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications