For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபாலும் காடு சென்றார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பழ. நெடுமாறன் தலைமையிலான தூதுக் குழுவினருடன் காட்டுக்குச் செல்லாமல்,வீரப்பன் அனுமதிக்காக காத்திருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், தற்போது நெடுமாறன்குழுவினருடன் சேர்ந்துள்ளார்.

நெடுமாறன் குழுவினர் மற்றும் கோபால் ஆகியோர் தலமலைப் பகுதியில் வீரப்பன்சிக்னலுக்காக காத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜ்குமாரை மீட்பதற்காக நெடுமாறன் குழுவினர் 2-வது முறையாகவும், கோபால் 6-வதுமுறையாகவும் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவுஇவர்கள் காட்டுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தூதுக் குழுவினர் காட்டுப் பயணம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்சட்டசபைத் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் பேச்சால் தடைபட்டது. தன்னை தேசத்துரோகி என்று சோ.பா. கூறியதால், காட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று நெடுமாறன்அறிவித்தார். இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மனிதாபிமானஅடிப்படையில் தனது காட்டுப் பயணத்தை மேற்கொள்வதாக நெடுமாறன் அறிவித்தார்.அதைத் தொடர்ந்து நெடுமாறன் குழுவினர் மீண்டும் காட்டுக்குக் கிளம்பினர். ஆனால்கோபால் கிளம்பவில்லை.

கோபாலை, வீரப்பன் புறக்கணிப்பதாக தகவல்கள் கிளம்பின. இதையடுத்து நக்கீரன்தரப்பில் கூறுகையில், கோபாலுக்கு இன்னும் வீரப்பனிடமிருந்து தகவல் வரவில்லை.வந்தவுடன் கோபால் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு வீரப்பனிடமிருந்து ஆடியோ கேசட்ஒன்று வந்தது. இதில் என்ன இடம் பெற்றிருந்தது என்று தெரியவில்லை. ஆனால் கேசட்வந்தவுடன் கோபால் காட்டுக்குக் கிளம்பிவிட்டார். தற்போது நெடுமாறன் குழுவினருடன்தலைமலையில் காத்திருக்கிறார்.

ராஜ்குமார் கடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் 107 நாட்கள் ஆகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X