ஆசிரியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் ஆசிரியர் வீட்டில் 60 பவுன் நகையைத் திருடியவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி (65). இவர் ஹிந்தி ஆசிரியராகப்பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி குடும்பத்துடன்உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
அப்போது அவரது வீட்டில் யாரோ சிலர் உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 60 பவுன்நகை, மற்றும் ரொக்கம் 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர். இதன்மொத்த மதிப்பு 3 லட்சமாகும்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications