கோவை மருத்துவனையில் ராஜ்குமார்: ஹெலிகாப்டரில் பெங்களூர் திரும்புகிறார்
பெங்களூர்:
காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோயம்புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஹெலிகாப்டர் மூலம் வியாழக்கிழமை பெங்களூர் அழைத்து வரப்படுகிறார்.
காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த அவர் தொட்டகாஜனூர் பண்ணை வீட்டில் தங்கிவிட்டு அங்கிருந்துநெடுமாறனுடன் அவர் காரில் ஈரோடு சென்றார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு காரில் கொண்டுசெல்லப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
மிகவும் களைப்புடன் காணப்பட்டதையடுத்து அவரை மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரதுகுடும்பத்தினர் முடிவு செய்தனர். இப்போது அவரது குடும்பத்தினரும் மருத்துமனையில் தான் உடன் உள்ளனர்.
மருத்துவமனையை சுற்றி மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரை பெங்களூருக்கு அழைத்து வர கர்நாட அரசு தனது ஹெலிகாப்டரை கோயம்புத்தூருக்கு வியாழக்கிழமைகாலை அனுப்புகிறது. அதன் மூலம் அவர் பெங்களூருக்கு அழைத்து வரப்படுவார்.
ராஜ்குமார் விடுதலை: கடத்தப்பட்ட பண்ணைக்கு செல்கிறார்












Click it and Unblock the Notifications