பிரசவத்திற்குப் பின் பெண் சாவு .. சேலத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பிரசவத்திற்குப் பின் சிகிச்சை பெற்ற பெண் மருத்துவனையில் இறந்தார். நர்ஸ்களின் அலட்சியத்தால்தான் அவர் இறந்ததாகக் கூறி நஷ்ட ஈடு கோரி பெண்ணின்உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம், ராசிபுரம் தேவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (30). இவரது மனைவி மணிமேகலை (25). இந்த பெண்,பிரசவத்திற்காக ராசிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த மருத்துவமனையில் இவருக்கு சுகப் பிரசவம் நடந்தது. பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மணிமேகலை மயக்கமடைந்தார். இதனைத் தடுக்க மருத்துவமனையில் இருந்த நர்ஸ்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்தார். இதனால்,பெண்ணின் உடலை சிகிச்சை பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கே அவரது உறவினர்கள் எடுத்து வந்தனர்.

ராசிபுரம் மருத்துவமனையில், பிரசவத்திற்கான செலவை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின்உறவினர்கள், நர்ஸ்களின் அலட்சியத்தால் தான் இந்த மரணம் ஏற்பட்டது எனக் கூறியும், அவரது இறப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கோரியும் மருத்துவமனை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் மணிமேகலையின் உடலை டாக்டர்கள் பெற்றுச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+