வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு .. கோருகிறது பாமக
கோவை:
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற எங்களது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே மணி கோவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோவையில் நடக்கவுள்ள 200 வது மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்க கோவை வந்த ஜி.கே மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். வீரப்பனைப் பிடிக்க இருமாநில அரசுகளும் பெரும் பொருட் செலவுகளை மேற் கொண்டுள்ளது.
வீரப்பன் மனம் திருந்தி நல்லவனாக மாற விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பொது மன்னிப்பு வழங்குவதில் தவறு இல்லை என்ற டாக்டர் ராமதாஸ்சின்கொள்கையில் மாற்றம் இல்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், மீண்டும் தீவிரவாதச் செயல்களில் வீரப்பன் ஈடுபட்டால், உடனடியாகதண்டிக்கலாம்.
பா.ம.க நடத்தி வரும் மாவட்ட மாநாடுகளால் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள பிரச்னைகளை அரசுக்குச் சொல்லி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.
இதனால் பொதுமக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது உரிமைக்காகக் குரல்கொடுத்து வருகிறோம்.
கோவையில் நடக்கவுள்ள 200 வது மாநாட்டில், டாக்டர் ராமதாஸ் முன்னின்று நடத்திய போராட்டங்கள் குறித்த கண்காட்சி இடம் பெறும். இதில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications