கட்சி தொடங்கினர் பொலிவிய இந்தியர்கள்
லா பாஸ் (பொலிவியா):
பொலிவியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் தங்களுக்கென புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
500 வருடங்களுக்கு மேல் வெள்ளை இன மக்களால் கொடுமைப் படுத்தப்பட்டு வரும் நிலையை மாற்ற புதிய கட்சி துவங்கியுள்ளதாக இந்தியர்களின்தலைவர் பெலிப் க்யூஸ்பே வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் லா பாஸிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் கிராமம் ஒன்றில் "பச்சகுடி இந்திய வம்சாவளி இயக்கம்என்ற அரசியல் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்சியை போல்வியாவில் வாழும் இந்தியத் தலைவர் பெலிப் க்யூஸ்பே தொடங்கி வைத்தார். 10, 000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கட்சிதொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பெலிப் க்யூஸ்பே பேசியதாவது:
பொலிவியாவின் மொத்த மக்கள் தொகை 80 லட்சமாகும். இதில் 60 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். அவர்களின் நலனிற்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் பச்சகுடி இந்திய வம்சாவளி இயக்கம் செயல்படும்.
புதிய கட்சியின் கொள்கையே பொய் சொல்லக் கூடாது. திருடர்கள் போல் செயல்படக் கூடாது. மிகவும் பலவீனமாக இருக்கக் கூடாது. தேச விரோதச்செயல்களில் ஈடுபடக் கூடாது ஆகியவையாகும். பச்சகுடி இயக்கம் வரும் 2002 ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும்.
உலகத்திலேயே பெரு மற்றும் கொலம்பியா ஆகிய இரண்டு நாடுகளிலும் கோகோ இலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கோகோ இலைஉற்பத்தியில் பொலிவியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கோகோ இலை உற்பத்தியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த செப்டம்பர் மாதம்விவசாயிகள் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர். இது வன்முறையாக மாறியது.
இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 165 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோகோ இலை உற்பத்தியை முற்றிலுமாக நீக்கி விடக் கூடாது.மேலும், தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடு பொலிவியா. இதனால் கோகோ இலை உற்பத்தியை அழிக்க அரசு முன்வரக் கூடாதுஎன்றார் பெலிப் க்யூஸ்பே.












Click it and Unblock the Notifications