சட்டசபைத் தேர்தல்: பிளஸ்டூ தேர்வுகளில் மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடந்தாலும் ப்ளஸ் 2மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என தமிழகஅரசு தேர்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

ப்ளஸ் 2 வுக்கும், பத்தாவது வகுப்புக்கும் வழக்கமா மார்ச் மாதம் தேர்வுகள் துவங்கும்.ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிந்து விடும். தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச்அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிநடைபெறுவதால் அதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் ப்ளஸ் 2மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் எனகூறப்படுகிறது.

சில பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதத்திற்கு பதிலாக இந்த மாதமேநடத்தப்படுகிறது. தேர்வை முன்னதாக நடத்துமாறு தேர்வாணையத்திடமிருந்துசுற்றறிக்கை வந்துள்ளதாக சில பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் இதைதேர்வாணையம் மறுத்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது ஆசிரியர்கள் மற்றும்அரசு ஊழியர்கள்தேவைப்படுவார்கள் என்று மட்டுமே அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

எனவே தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் முதல்வாரத்திலும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். தேர்வுகள்நடக்கும் போது தேர்தல் நடந்தாலும் தேர்வுகள் பாதிக்கப்படாது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் சிரமம்ஏற்படும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்இல்லாதபடி தேர்வு ஆணையம் பார்த்துக் கொள்ளும் என தேர்வுத் துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+