கேரளாவுக்கு கடத்தப்பட்ட 100 தங்கக் கட்டிகள்
கோவை:
கேரளாவிற்குக் கடத்த முயன்ற ரூ. 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 தங்கக் கட்டிகளைப் போலீசார் கைப்பற்றினர்.
கோவையிலிருந்து பாலக்காடு ரோடு வழியாக ஒரு கார் வேகமாகச் சென்றது. இந்தக் காரைச் சந்தேகித்த போலீசார் குனியத்தூர் என்ற இடத்தில்தடுத்து நிறுத்தினர். காரில் பயணம் செய்த மூன்று பேரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாரின் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து காரைச்சோதனையிட்டனர். அப்போது காரின் சீட்டிற்கு அடியில் இருந்த ரகசிய அறையில் தங்கக் கட்டிகள் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
நூறு தங்கக் கட்டிகள் ஒவ்வொன்றும் 116 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 55 லட்சமாகும். இந்த தங்கக்கட்டிகள் கடத்தல் தங்கமா என்பது பற்றி ஆராய இதனை சுங்க வரித் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
காரில் பயணம் செய்த மலப்புரம் மாவட்டம், வெள்ளியூரைச் சேர்ந்த நெளஷத் (21), சமீல் (21), ஆகியோர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications