என்.டி.ஆர். பேத்திகளை பாட்டியிடம் விட உத்தரவு
சென்னை:
சென்னையில் தற்கொலை செய்து கொண்ட என்.டி. ராமராவின் பேத்தியின்குழந்தைகளை அவர்களது தாய் வழி பாட்டியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்.டி. ராமாராவின் பேத்தி குமுதினி கடந்த அக்டோபர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். குமுதினியின் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெறுஅவரது தந்தை நந்தாமோரி ஜெயக்கிருஷ்ணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
மனுவை ஏற்று நீதிபதி தூம் மீனாகுமாரி, குமுதினியின் குழந்தைகளை கண்டுபிடித்துஹைதராபாத் அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து குமுதினியின்கணவர் ஸ்ரீநிவாச பிரசாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில், போலீசார் தனது இரு குழந்தைகளையும் கண்டு பிடித்து தக்கபாதுகாப்புடன் குமுதினியின் ஈமச் சடங்குகளை நடத்த அனுப்பி வைக்குமாறுகோரியிருந்தார்,
மனுவை ஏற்ற நீதிபதிகள் என்.கே. ஜெயின், கே. சம்பத் ஆகியோர், வழக்கின் தீர்ப்பைநவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் குழந்தைகளை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.அதன் படி குழந்தைகள்நீதிமன்றத்தில் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.
பின்னர், வழக்கு முடியும் வரை குழந்தைகள் அவர்களது தாய் வழி பாட்டி வீட்டில்தங்கியிருக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications