வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து விவசாய அதிகாரி வீட்டில் ரூ 20ஆயிரம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி கடப்பா ரோட்டில் வசித்து வருபவர் சுப்ரமணியம். இவர் பள்ளிப்பட்டுவிவசாய அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரதுமனைவி ரமாதேவி.

சுப்ரமணியம் வீட்டிற்குள், சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் 5 பேர் கொண்டகொள்ளையர்கள் நுழைந்தனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றுஅவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் சுப்ரமணியம்பற்றியும், அவரது குடும்பம், சொத்து, வருவாய் குறித்தும் கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட விவரப் பட்டியல்கள் வைத்திருந்தனர்.

அந்த பட்டியல்களை சுப்ரமணியத்திடம் காட்டி விளக்கம் கேட்டனர். வீட்டில்சோதனையிடப் போவதாக கூறிவிட்டு எல்லா அறைக்குள்ளும் புகுந்து எதையோதேடினர்.

உண்மையில் அதிகாரிகள் என்று நம்பிய சுப்ரமணியம் குடும்பத்தினர் பீரோ, பெட்டிஎன்று எல்லாவற்றையும் திறந்து காட்டினர். கிட்டத்தட்ட அவரது வீட்டில் 100 சவரன்தங்க நகைகள் இருந்தன. 1 லட்சம் பணம் இருந்தது.

அவற்றை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் கேட்டனர். பின்னர் அவற்றைகுறிப்பெடுத்துக் கொள்வது போல் நடித்தனர். பின்னர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்அலுவலகம் அருகில் தங்களது அலுவலகம் இருப்பதாகக் கூறி, அங்கே வந்துசந்திக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர் அந்த நகைகளை எல்லாம் எடுத்து மீண்டும் பீரோவில்வைக்க முயன்ற போது அதில் இரண்டரை சவரன் நகையும், 20 ஆயிரம் ரூபாய்ரொக்கமும் குறைந்திருந்தது.

உடனே சுப்ரமணியம் நேராக திருவள்ளூர் வந்தார். அங்கே வருமானவரித்துறைஅலுவலகத்தை தேடி அலைந்து திரிந்துவிட்டு, ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர்திருத்தணி போலீசில் புகார் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+