சுத்தமாகிறது உலகின் 2-வது நீளமான கடற்கரை
சென்னை:
தேசிய மாணவர் படையைச் (என்.சி.சி.) சேர்ந்த 800 மாணவர்கள் சென்னை மெரீனாகடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமைக்குரிய கடற்கரைமெரீனா. இது இப்போது குப்பை, கூளங்களால் அசிங்கமாக மாறி வருகிறது.நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் இந்த பகுதியை சுத்தமாக வைக்கமுடியாமல் சென்னை மாநகராட்சி திணறுகிறது.
அவ்வப்போது சில தொண்டு நிறுவனங்கள் குப்பைகளை அகற்றும் பணியில்ஈடுபடுவது உண்டு.அன்று மட்டும் கடற்கரை சுத்தமாக இருக்கும். மறுநாள் பழையநிலைமைக்கு மாறிவிடும்.
இந்நிலையில் தமிழ்நாடு கடற்படையின் தலைமையக பி யின் தலைமை அதிகாரிகுருராஜ் தலைமையில் சென்னை பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையின்முப்படைப் பிரிவினர் 800-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து மெரீனாவைசுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
சீரணி அரங்கில் இருந்து காந்தி சிலை வரை உள்ள பகுதிகளில் குப்பைகளைஅகற்றினர். மாணவர்களின் பொறுப்புணர்ச்சியை கண்ட பொது மக்களும் துணைக்குவந்தனர்.












Click it and Unblock the Notifications