தீவிரவாதிகள் ஒரு பிரச்சினையே இல்லை .. ஜார்கண்ட் முதல்வர்
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் பிரச்சினையை எளிதில் தீர்க்க முடியும் என்றுஅம்மாநில முதல்வர் பாபு லால் மராண்டி தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜார்கண்ட் பகுதியில் உள்ளதீவிரவாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மிகவும் சாதாரணவிஷயம்தான் இது.
ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போராடி வருபவர்கள் அதைக் கீழே போட்டுவிட்டுபேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். பொது வாழ்க்கைக்கு வர அனைத்துத்தீவிரவாதிகளும் முன்வர வேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஜார்கண்ட் பகுதியிலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.
மாநிலத்தில் தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. ஜார்கண்ட் பந்த் நடத்தப் போவதாக ஜார்கண்ட் விடுதலை முன்னணிஅமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடையே ஆதரவு இருக்காது என்றார் அவர்.
யு.என்.ஐ.