நெஞ்சு வலி இருப்பதாக நான் நடித்தேனா? மறுக்கிறார் ராஜ்குமார்
சென்னை:
நெஞ்சு வலி இருப்பது போல நடித்து நான் வீரப்பன் பிடியிலிருந்து தப்பினேன் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என நடிகர்ராஜ்குமார் கூறினார்.
காட்டுக்குள் வந்த டாக்டர் பானு நெஞ்சு வலி இருப்பது போல நடிக்கச் சொன்னதாகவும் அவ்வாறு தான் நடித்ததையடுத்துவீரப்பனிடம் பானு பேசி தன்னை விடுவித்ததாகவும் ராஜ்குமார் கூறியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இதை ராஜ்குமார்வெள்ளிக்கிழமை மறுத்தார்.
நெடுமாறன் மூலமாக ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், வீரப்பனின் கருணையைப் பெற்றுத் தான் நான் விடுதலை ஆனேன்என்பது உண்மையல்ல. நான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள்.
எனக்கு நெஞ்சு வலி இருந்ததால் தான் பானுவை நெடுமாறன் அழைத்து வந்தார். என்னை அவர் சோதித்தபோது எனக்குஇருக்கும் பிரச்சனையை சொன்னேன். ஏன் இதை வெளியில் சொல்லாமல் மறைத்தீர்கள் என பானு கேட்டார்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் நான் நலமுடன் இருப்பது போல நடித்துத் தானே ஆக வேண்டும். ஆகவே தான் எனது நெஞ்சுவலியை வெளியில் சொல்லவில்லை என்று பானுவிடம் கூறினேன்.
நெடுமாறன், கோபால் உள்ளிட்ட தூதர்களின் முயற்சி, தமிழக-கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள், இரு மாநில மக்களின்நல்லாசி காரணமாகத்தான் நான் மீட்கப்பட்டேன். எனவே இந்தப் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார் ராஜ்குமார்.
இந்த அறிக்கையை நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.