டீ உற்பத்தியை நிறுத்த இந்தியா முடிவு
குவஹாத்தி:
தேயிலை உற்பத்தியை அடுத்த மாதம் முதல் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
டீத்தூள் விலையில் ஏற்பட்டு கடுமையான விலை வீழ்ச்சி, பருவநிலை காரணமாக தேயிலையின் தரம் குறைந்துபோனதுகாரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியைத் தொடர்ந்தால் தேயிலையின் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி செய்யும் சுமார் 2,000 விவசாயிகள், டிசம்பர் 12ம்தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிட வேண்டும் என தேயிலைப் பயிரிடுவோர் சங்கம் அறிவுருத்தியுள்ளது. ஏற்கனவே விற்காமல்உள்ள தேயிலையை விற்ற பின்னர் தான் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளது.
உற்பத்தியை நிறுத்தினால் தான் டீயின் விலையை அதிகரிக்க முடியும் என இச் சங்கம் நினைக்கிறது. விலை வீழ்ச்சியால் தேயிலைதோட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சிறிய, நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 806 மில்லியன் கிலோகிராம் டீ உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 55 சதவீதம் அஸ்ஸாமில் தான்உற்பத்தியாகிறது. தேயிலைத் தொழிலை நம்பி சுமார் 1 கோடித் தொழிலாளர்கள் உள்ளனர்.
விலை வீழ்ச்சியால் பல பெரிய தேயிலை உற்பத்தியாளர்களே தோட்டங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.