டெல்லி கிரிக்கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வே தடுமாற்றம்
டெல்லி:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில்ஜிம்பாப்வே அணி தடுமாற்றத்துடன் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி சனிக்கிழமைதுவங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், முதலில் பேட்செய்ய முடிவெடுத்தார்.
துவக்கமே ஜிம்பாப்வேக்கு அதிர்ச்சியாக இருந்தது. 15 ஓவர்களுக்குள்ளேயே இரண்டுவிக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே. 4-வது ஓவரின் நடுவில், கிரான்ட் பிளவர்அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் பூஜ்யம். ஸ்ரீநாத் பந்தில் அவர் போல்டுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து 9வது ஓவரில் ஜிம்பாப்வேக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார் ஸ்ரீநாத்.இப்போது விழுந்தவர் ரெனி. அணியின் எண்ணிக்கை 15 ஆக அப்போது இருந்தது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே தொடர்ந்து தடுமாற்றத்துடனேயேரன்களை சேர்க்கத் தொடங்கியது. இந்தியப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால், ரன் குவிப்புக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
குறிப்பாக, ஸ்ரீநாத்தும், அகர்கரும் அபாரமாக பந்துவீசினர். பேட்ஸ்மென்கள் ரன்எடுக்க எந்த வாய்ப்பையும் அவர்கள் தரவில்லை.
முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், கர்லிஸ்லியும், கேம்பலும்வீழ்ந்தனர். கர்லிஸ்லியை டெண்டுல்கர் அவுட் செய்தார். ஸ்ரீநாத்தின் மூன்றாவதுவிக்கெட்டாக கேம்பல் ஆனார்.
67 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள்எடுத்திருந்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. விக்கெட் கீப்பராகவிஜய் தாஹியாவும், பந்துவீச்சாளர் ஜாகீர் கானுக்குப் பதில், வி.வி.எஸ்.லட்சுமணும்சேர்க்கப்பட்டிருந்தனர்.
யு.என்.ஐ.