வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவும்: அத்வானி
மும்பை:
வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி சனிக்கிழமை தெரிவித்தார்.
மும்மை மாநகராட்சி கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேலின் உருவச் சிலையை சனிக்கிழமை அத்வானி திறந்துவைத்தார். சிலை திறப்பு விழா முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை கர்நாடக, தமிழக அரசுகளிடம் மத்திய அரசு விட்டு விட்டது.சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் உதவி கேட்டால் அதைச் செய்வதற்குமத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது.
ஏற்கனவே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறோம். இதில் மாற்றம் ஏதுமில்லை என்றார் அத்வானி.
முன்னதாக, அத்வானி குஜராத் மாநிலம் சென்றார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது நினைவிருக்கலாம். அந்த இடத்தை அத்வானி நேரில்சென்று பார்வையிட்டார்.
இந்த விபத்தில் உயிர்தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 அதிகாரிகளையும் அவர் பார்த்துஉடல்நலம் விசாரித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications