ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் அசார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

கிரிக்கெட் சூதாட்டத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் சில பகுதிகள் உண்மையானவை என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் அசாருதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அசாருதீன், ஜடேஜா, மோங்கியா. மனோஜ் பிரபாகர், அஜய் ஷர்மா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை செய்தது.

இவர்கள் 5 பேருக்கும் சர்வதேச, உள்ளூர் விளையாட்டுகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இவர்களை விசாரிக்க கிரிக்கெட் வாரியம் முன்னாள்சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் மாதவனை நியமித்தது.

இவர் அசாருதீன் தவிர மற்ற நால்வரிடமும் விசாரணை நடத்தி முடித்தார். அசாருதீன் பாதுகாப்பை காரணம் கூறி விசாரணையை தட்டிக் கழித்து வந்தார்.

பாதுகாப்பு காரணமாக ஹைதராபாத்தை விட்டு வரமுடியாது எனவும் தன்னை ஹைதராபாத்தில் வந்து விசாரிக்கவேண்டும் எனவும் மாதவனுக்குவேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து மாதவன் ஹைதராபாத் வந்து அசாருதீனிடம் 6 மணி நேரம் விசாராணை நடத்தினார். அந்த விசாரணையின் போது அசாருதீன் தன் மீதிசுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் சூதாட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை எனவும், தன் வளர்ச்சியை விரும்பாத சிலர்செய்த சதி இது எனவும் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னை முக்கிய குற்றவாளியாக சேர்த்திருப்பதையும் அசார் ஆட்சேபணை செய்தார்.

ஆனாலும் சி.பி.ஐ. குற்றுப்பத்திரிக்கையின் சில பகுதிகள் சரியானவை என ஒப்புக் கொண்டார் என விசாரணை குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+