உடல்நிலை தேறிவருகிறார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் நிலையில் நல்ல முன்னேற்றம்இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை செய்திக் குறிப்புகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இருப்பினும் அவர் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மிகவும்திருப்திகரமாக உள்ளது என்று மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி சனிக்கிழமையும், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஞாயிற்றுக்கிழமையும் அப்பல்லோ மருத்துவமனைக்குவந்து மாறனைப் பார்த்தனர். அவர் விரைவில் குணம் பெற்று எழ அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் மைக்ரேயின் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் மாறன்.
யு.என்.ஐ.