For Daily Alerts
Just In
லஞ்சம் வாங்காதீர் என்கிறார் மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்:
வாக்குகளை விலைக்கு வாங்கும் பழக்கம் நாட்டைக் கெடுத்து விடும். அதனால் யாரும் ஊழலில் ஈடுபடக் கூடாது என்று மலேசியப் பிரதமர் மஹாதீர்,ஆளும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், நாட்டில் ஊழல் வேண்டாம் என்று அறிவுரை கூறினேன். வேண்டுகோள் விடுத்தேன். பிரார்த்தனை செய்தேன். அழுதேன்.நம்முடைய இனத்துக்காக லஞ்சம் தொடர்புடைய எதையும் மறுத்து விடுங்கள் என்றார்.
1957 ம் வருடம் நாடு விடுதலை பெற்றது முதல் உம்னோ என்று அழைக்கப்படும் மலேய தேசிய அமைப்பு, மலேசியாவை ஆள்கிறது. ஆனால்தற்போது மலேசியாவில் வாழும் முஸ்லீம்களிடையே அதற்கு ஆதரவு குறைந்து வருகிறது.
உம்னோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக ஆளும் கூட்டணியின் மற்ற கட்சிகளை நம்ப வேண்டிய சூழ்நிலைஉருவாகியுள்ளது.
Comments
Story first published: Sunday, November 19, 2000, 5:30 [IST]