விண்ணுக்குச் செல்லத் தயாராகிறது ஜிஎஸ்எல்வி
திருச்சூர்:
இந்திய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில்செலுத்தப்படும் என இஸ்ரோவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலுள்ள திருச்சூரில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் கஸ்தூரி ரங்கன் பேசுகையில், இந்தியவிண்வெளியின் ஆராய்ச்சிப் பணிகளில் ஒரு கட்டமாக தற்போது முழுவதுமாக இந்திய தொழில் நுட்பத்தில்ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இது சோதனை முறையில்அனுப்பப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்று வருகின்றன.
இன்சாட் செயற்கைகோள் வரிசையில் இன்சாட் - 3ஏ, இன்சாட் - 3சி ஆகிய செயற்கைகோள்கள் விண்ணிற்குஅனுப்பப்பட உள்ளன. இவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணிற்கு அனுப்பப்படும். இதன் மூலம்இந்தியாவின் விண்வெளி அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications