சமையல் கேஸ் விலை குறைப்பு
டெல்லி:
சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல மண்ணெண்ணையின் விலையும் லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்ததால்பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2.39 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.75 ம், மண்ணெண்ணை விலை லிட்டருக்கு 2.81 ம்உயர்ந்தது. சமையல் கேஸ் விலை ரூ 36.20 ஆக அதிகரித்தது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும், எனவே விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும்என்றும் எதிர்க்கட்சிகள் ஆர்பாட்டங்கள் நடத்தின.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகி விடப்போவதாகவும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இறுதியில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த விலைக்குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்பதைமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம்நாயக் செவ்வாய்க்கிழமை அறிவிப்பார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைப்பதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.












Click it and Unblock the Notifications