முதல்வர் வீடு முன் தர்ணா ..குடிசைவாசிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி வீடு முன் தர்ணா நடத்த முயன்ற 200 குடிசைவாசிகளைபோலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். கைதானவர்களில் 103 பேர் பெண்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள குடிசைவாசிகள்.சாலையை அகலப்படுத்துவதற்காக தங்களது குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள்இடித்துத் தள்ளிவிட்டதாகவும், முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சிசெயல்பட்டு விட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்கவும், தர்ணா செய்யவும் அவர்கள்வந்திருந்தனர். ஆனால் வீட்டை நெருங்குவதற்கு முன்பே அவர்களை போலீஸார்கைது செய்து விட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications