தமிழகத்தில் மேலும் ஒரு ஜாதிக் கட்சி !
பழனி:
தமிழகத்தில் கொங்கு நாடு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 23 ம் தேதிஈரோட்டில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் ஆர்.தேவராஜன் பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு எந்த அரசும், மதிப்புக் கொடுப்பதில்லை. எந்தக் கூட்டத்திற்கும், சாதிஅமைப்புக்களுக்கு அரசு எந்தவித அழைப்பும் கொடுப்பதில்லை. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் சாதி என்ற போர்வை உள்ளது.
தற்போது கொங்குநாட்டை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் 1.3 கோடி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் உள்ளனர். இவர்கள் 69 சட்டப்பேரவைதொகுதியிலும், 12 நாடாளுமன்றத் தொகுதியிலும், வெற்றியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர்.
ஆகவே கொங்கு நாட்டை மையமாக வைத்து கொங்கு நாடு மக்கள் கட்சி என்னும் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கோவை செழியன்தொடங்கிய தமிழ் தேசிய கட்சிக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, 3 வது அணி என எந்தக் கூட்டணி அதிக இடங்களைத் தருகிறதோ அந்தக் கூட்டணியுடன் கொங்கு நாடுமக்கள் கட்சி கூட்டணி அமைக்கும்.
கொங்கு நாடு மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 23 ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் ஈரோட்டில் நடைபெறும்.
தமிழகத்தில் சாதிக் கட்சிகள் அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் சாதிக்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது பல்வேறுபிரச்சனைகள் களையப்படும். அரசியல்வாதிகளைக் கொண்ட கூட்டணியைக் காட்டிலும் சாதிக் கட்சிகளால் நல்ல ஆட்சியைத் தர முடியும் என்றார்தேவராஜன்.












Click it and Unblock the Notifications