For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார் ராஜ்குமார் மனைவி
சென்னை:
வீரப்ரபன் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவிபர்வதம்மா ராஜ்குமார், தமிழக முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இது பற்றி முதல்வர் கருணாநிதி கூறுகையில், ராஜ்குமாரின் மனைவி என்னுடன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராஜ்குமார் சிகிச்சை பெற்று வருவதால்அவரால் கருணாநிதிக்கு நன்றி சொல்ல உடனே வர முடியவில்லை. இன்னும் இரண்டுமூன்று நாட்களுக்குள் அவர் என்னை வந்து சந்திப்பார் என சொன்னார்.
நான்அவரிடம் எந்த வித அவசரமுமில்லை. ராஜ்குமார் உடல்நிலை பரிபூரணமாக சரியானபின் வந்தால் போதும் என கூறினேன் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, November 20, 2000, 5:30 [IST]