வீரப்பன் ஒரு சமூக விரோதி: பா.ஜ.க.
திருப்பூர்:
சமூக விரோதி வீரப்பனை இனியும் விட்டு வைக்கக் கூடாது என பா.ஜ.கட்சியின் மாநிலத் தலைவர் கிருபாநிதி கூறினார்.
பா.ஜ.கவின் தாமரை ரத யாத்திரைக்குத் தலைமை ஏற்றுள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் கிருபாநிதிதிருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்க நிெடுமாறன் சென்றது ஏன், அதில் உள்ள உள்நோக்கம் என்ன என்பதை நாங்கள் நன்குஅறிவோம். நெடுமாறனுடன் எங்களுக்கு எவ்விதக் கருத்து ஒற்றுமையும் இல்லை.
வீரப்பன் விஷயத்தில் பா.ஜ.கவின் நிலை முதல்வருக்கு நன்றாகத் தெரியும். வீரப்பனைப் பிடிக்க முதல்வர் கட்டாயம் நடவடிக்கைஎடுப்பார் என நினைக்கிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நேரில் சென்று வலியுறுத்துவேன்.
தடா கைதிகளை விடுவிப்பது நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும். வீரப்பன், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்பதே பா.ஜ.கவின் கொள்கை.
வாஜ்பாய் அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்க தாமரை ரத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். இதில் குமரிமாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், ராமேஸ்வரத்திலிருந்து எச். ராஜாவும், தேன்கனிக்கோட்டையிலிருந்து இல. கணேசனும், நீலகிரி எருமாடு பகுதியிலிருந்து நானும் இந்த ரத யாத்திரையைத் துவக்கியுள்ளோம்.
திருச்சியில் டிசம்பர் முதல் தேதியில் இந்த ரதயாத்திரை நிறைவு பெறும். அங்கு பொதுக் கூட்டம் நடக்கும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிக தொகுதியில் நிற்போம். தற்போது பா.ஜ.கவில்12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள்.
சாதிக் கட்சிகளை எப்போதும் பா.ஜ.க. ஏற்காது. அவற்றை வரவேற்கவும் மாட்டோம். வரும் சட்டசபைத் தேர்லில் இந்தக் கட்சிகள்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தாலும், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்றார்.