திண்டுக்கல்லில் வெடித்தது ராணுவ பயிற்சி குண்டுகள்
மதுரை:
திண்டுக்கல் அலுமினியம் தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 2 பேர் இறந்தசம்பவத்தில், ராணுவத்தில் பயிற்சிக்காக உபயோகிக்கப்படும் வெடிகுண்டுகள்பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள தொழிற்பேட்டையில் 2 நாட்களுக்கு முன் வெடிவிபத்துநடந்தது. இதில் 2 பேர் இறந்தனர். இதுகுறித்து விசாரிக்க 2 தனிக் குழுக்கள்நியமிக்கப்படடுள்ளன.
இந்த குழுக்களின் விசாரணையில், வெடிவிபத்து நடந்த இடத்தில் வெடிக்காதநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள், உள்ளூரிலேயே வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குண்டுகள், ராக்கெட்டில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை என்றும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ராஜா கூறுகையில், செப்டம்பர் 22 மற்றும் 26ஆகிய இரு நாட்களும் கரூர் அருகே உள்ள வீரமலைக் காட்டில் ராணுவவீரர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அப்போது இந்தக் குண்டுகள்பயன்படுத்தப்பட்டன. அதே குண்டுகள்தான் திண்டுக்கல் விபத்திலும்பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த 2 இரும்புப் பொருள் டீலர்களிடம்விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்த அலுமினியத் தொழிற்சாலைவளாகத்திலிருந்து 21 சிறிய அளவிலான குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் இதைக் கண்டுபிடித்து,செயலிழக்கச் செய்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளின் மீது பயிற்சிக்காகப் பயன்படுத்தக் கூடியதுஎன்ற எழுத்துக்களும், பல முத்திரைகளும் உள்ளன.
இந்த வெடிகுண்டு விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.