ரயில் நிலையங்கள், ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
கோயம்பத்தூரில் நவம்பர் 29-ம் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலைசெய்யப்பட்ட நினைவு தினம் மற்றும் டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதிஇடிக்கப்பட்டதன் நினைவு தினம் ஆகியவற்றையொட்டி, தமிழகம் முழுவதிலும் ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதிலும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும். ரயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் அனைவரும் தீவிரமாககண்காணிக்கப்படுவார்கள்.
ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு, ரயில் நிலையங்களில்அமைக்கப்பட்டுள்ள வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள்மேற்கொள்ளப்படும்.
முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும்மெட்டல் டிடக்டர் கருவிகள் பொருத்தப்படும். பயணிகள் வைத்திருக்கும்பொருட்களும் சோதனை செய்யப்படும்.
தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படை, குண்டுகளைக் கண்டறியும் படை, மோப்பநாய்கள், ரயில்வே போலீஸ், ஊர்க்காவல் படை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.