பவானி மக்களை பயமுறுத்திய முதலை
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் முதலையைப் பார்த்தபொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் ஒரு பாலம் உள்ளது. இந்தப்பகுதியில் ஆண்கள், பெண்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் ஒரு படித் துறையைஅமைத்துள்ளனர். இந்தப் படித்துறையில் ஒரு பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தண்ணீருக்குமேல் ஒரு முதலையின் தலை தெரிந்துள்ளது. அந்த முதலைமீன்களைப் பிடித்து சாப்பிட்டு அட்டகாசம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அப் பெண் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். முதலையைப் பொதுமக்கள்கூடி வேடிக்கை பார்த்தனர். இதே முதலை கரையோரத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.
இதனால் பவானி ஆற்றுப் பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications