தமிழகத்துக்கு கூடுதல் காவிரி நீர் வழங்கிய கர்நாடகம்
மேட்டூர்:
காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் 71 டி.எம்.சி. நீரை அதிகம் வழங்கியுள்ளது.
கர்நாடகம் பெரிய மனது வைத்து இதைத் தந்துவிடவில்லை. கர்நாடத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதையடுத்தது தான் கூடுதலல் நீர் மேட்டூரை அடைந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புப்படி இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை தமிழகத்துக்கு கர்நாடகம் 177 டி.எம்.சி.நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு 248 டி.எம்.சி. நீர் வந்து சேர்ந்துள்ளது.
கடும் மழை காரணமாக கூடுதலாகவே நீரை வழங்கியுள்ளது கர்நாடகம். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்துஅணைக்கட்டுகளும் முழு அளவில் நிறைந்துள்ளது.
மேட்டூருக்கு மேலும் நீர் வந்து கொண்டிருப்பதால் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டஙகளைச் சேர்ந்த விவசாயிகள்மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications