"மூலிகை பெட்ரோல் ராமருக்கு கோர்ட் எச்சரிக்கை
சென்னை:
கலப்பட பெட்ரோல் தயாரித்து பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக, ராமர் பிள்ளை வரும் 27 ம் தேதிகோர்ட்டில் ஆஜராக வில்லையென்றால் அவருக்குப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்ட்ரேட்ராமர்பிள்ளைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலிகைப் பெட்ரோல் என்று ஏமாற்றி கலப்படப் பெட்ரோல் தயாரித்தது தொடர்பாக ராமர் பிள்ளை உள்பட 5 பேர்மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு,நகல்களும் வழங்கப்பட்டன.
குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் 10வது மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது ராமர் பிள்ளையும், அவரதுதாயாரும் தவிர பிறர் ஆஜராயினர். ராமர் பிள்ளைக்கும், அவரது வளர்ப்புத் தாய்க்கும் உடல்நிலை சரியில்லைஎன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் புதன்கிழமை கோர்ட்டில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து வழக்குவிசாரணையை வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அவர்கள் 27 ம் தேதியும் ஆஜராக வில்லையென்றால்அவர்களுக்குப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications