12 டன் சர்க்கரையுடன் லாரி பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகாவுக்கு கடத்தப்பட்ட 12 டன் சர்க்கரை லாரியுடன்பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்துக்குபேர்ணாம்பட்டு வழியாக சர்க்கரை கடத்தப்படுவதாகஅதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரிமோகன் உத்தரவுப்படி குடியாத்தம் தாசில்தார் கண்ணையன்தலைமையில் அதிகாரிகள் குழு, பேர்ணாம்பட்டு வி.கோட்டாசாலை சந்திப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை மடக்கிசோதனையிட்டனர். லாரியில் 100 கிலோ கொண்ட 125 மூட்டைசர்க்கரை இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம்.
லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் ராஜா கைதுசெய்யப்பட்டார். கடத்தல் சர்க்கரையுடன் லாரியை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications