பெண் வக்கீல் தற்கொலை
சென்னை:
காதல் மணம் புரிந்த பெண் வக்கீல் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் முன்னாள்நீதிபதியின் மகள்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசிப்பவர் வக்கீல் பாலாஜி. இவரது மனைவி தாரகேஸ்வரி.இவரும் வக்கீல். தாரகேஸ்வரியின் தந்தை முன்னாள் நீதிபதி. இவர் அரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
பாலாஜியும், தாரகேஸ்வரியும் வக்கீல் படிப்பு டிந்தவுடன் சீனியர் வக்கீல் ஒருவரிடம் பணியாற்றினர். அப்போதுஅவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் காதல் மணம் புரிந்துகொண்டனர். இவர்களுக்கு இப்போது கார்த்திக் என்ற ஒரு வயது மகன் உள்ளான்.
இந் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தாரகேஸ்வரி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டுதீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications