மே.வங்கம்: படகு கவிழ்ந்து 17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தினாஜ்பூர்:
மேற்கு வங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மகானந்தா ஆற்றில், படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு மகானந்தா ஆற்றில் நடந்தது. வியாழக்கிழமை இரவு 26 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றுமகானந்தா ஆற்றில் சென்று கொண்டிருந்தது.
நடு ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது, எதிரே மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டு தலைகுப்புறக் கவிழந்தது.
இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 17 பேர் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்தனர். மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில், மீட்புப்படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications