மாறன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை நன்கு தேறி வருகிறது.
அவர் தினமும் 4 மணி நேரம் எழுந்து அமர்கிறார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திறமை வாய்ந்த டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
லண்டன் மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து 24 மணிநேரமும் முரசொலி மாறனின் உடல்நிலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். வழக்கமான உணவு வகைகளைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். குடும்பத்தினரிடம் சரியாகப் பேசிவருகிறார்.
மாறனின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீவிர சிகிச்சை பிரிவில் முரசொலி மாறன் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. தினமும் 4 மணி நேரம் உட்கார வைக்கப்படுகிறார்.நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் ஒரே சீராக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் டாக்டர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications