ஊட்டியில் கடும் மழை, சாலைகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மலைப் பகுதி என்பதால் பல இடங்களில்இருந்த மின்சாரக் கம்பங்கள் வீழ்ந்தன. மேலும், சில இடங்களில் உள்ள மின்கம்பங்கள் மழை வெள்ளத்தால்அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய இடங்களில் மின்சாரம் வினியோகம் இருந்தால் ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் மின்சாரம் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடை பட்டது.
கன மழையால் ரோடுகள் மற்றும் சிற்றோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஊட்டியைச் சுற்றிலும், கோவையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications