கடும் மழை: சரியான உடைகள் இல்லாமல் அதிரடிப்படையினர் அவதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

வீரப்பன் காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதிரடிப்படையினரின் வேட்டையில் பின்னடைவுஏற்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பிற்குப் பிறகு உடனடியாக அதிரடிப் படையினர் வீரப்பனைப் பிடிக்க களம்இறங்கினர். ஆனால், வானிலை மற்றும் காலச் சூழ்நலை எப்போதுமே வீரப்பனுக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வீரப்பனுக்குக் கை கொடுத்து வருவது இந்த இயற்கை தான். கடந்த 108நாட்களாக அமைதியாக இருந்த வானம், இப்போது மழை தூவி வருகிறது.

காடு முழுவதும் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது. இந்தக் காட்டுப் பகுதியில் பகல் கூட இரவாகத் தான்காட்சியளிக்கிறது. பகலிலும் வாகனங்கள் விளக்குகளைப் போட்டுக் கொண்டு தான் சென்று வருகின்றன.

இதனால் வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப்படையினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், இப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் அதிரடிப்படையினர் குளிரில் வாடிக் கொண்டுள்ளனர்.

மேலும் அதிரடிப்படையினருக்கு போதிய அளவு அதிரடிப்படைக்குரிய உடைகள் கூடக் கொடுக்கப்படவில்லை.இதனால் காக்கிச் சட்டையுடன் தான் பணியாற்றி வருகின்றனர். இந்த உடை, குளிருக்கோ, பூச்சித் தாக்குதலிலோஇருந்து பாதுகாக்கும் திறன் கொண்டதில்லை.

எனவே, ஆங்காங்கே முகாமில் தங்கியுள்ள போலீசாரின் அவதி நிலையைக் கருத்தில் கொண்டு காட்டில் இருந்துவெளியேற உத்தரவு வருமா என்ற நிலையில் தான் அதிரடிப்படையினர் உள்ளனர்.

மழையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வீரப்பன் கேரளக் காட்டுப் பகுதிக்குத் தப்பிச் சென்றிருக்கலாம்என அதிரடிப்படையினர் கருதுகின்றனர். எனவே, இப்போதைய சூழ்நிலையில் அதிரடிப்படையினர் பணியில்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+