For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கொலை, கொள்ளை, வழிப்பறி என்று சென்னை மாநகரைக் கதி கலங்கச் செய்த பயங்கர கொள்ளையர்கள் 7 பேரை போலீசார்கைது செய்துள்ளனர்.

1992ம் ஆண்டு முதல் சென்னை நகரின் தாதாவாக வலம் வருபவன் பாபு. கொலை வழக்கில் சிறையில் இருந்த இவன் பரோலில்வெளிவந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனது கூட்டாளிகள் சொட்டை பாஸ்கர், சுந்தர், விஜயகுமார்,கணேசன், செந்தில், சரவணன் ஆகியோர்.

இந்த 7 பேரும் ஒரு கோஷ்டியாக செயல்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து மூலம் பலரை மிரட்டி பணம்பறித்தனர். ஆள் கடத்தல், மார்வாடிகள் வீட்டில் கொள்ளை அடித்தல், வழிப்பறி செய்தல் என்று எல்லா குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தனர்.

இவர்களை பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு ரவுடி பாபுவை போலீசார்செம்பியம் பகுதியில் பிடித்தனர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பேரில் மற்ற கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X