கிரிக்கெட் ஊழல்: அறிக்கையை சமர்பித்தார் மாதவன்
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மேட்ச் பிக்சிங் குற்றங்கள் குறித்து விசாரித்து வந்த முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்மாதவன் தனது விசாரணை அறிக்கையை சனிக்கிழமை சமர்பித்தார்.
சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாதவனைக்கொண்டு மீண்டும் விசாரித்தது.
விசாரணை விறுவிறு என நடத்தி முடித்த மாதவன் தனது விசாரணை விவரங்களை கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் முத்தையாவிடம் சமர்பித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன். அஜய் ஜடேஜா,அஜய் சர்மா, மனோஜ்பிரபாகர், நயான் மோங்கியா ஆகியோர் கிரிக்கெட் சூதாடட்த்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது.
இது குறித்து விசாரணை செய்ய முன்னாள் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் மாதவனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் நியமித்தது. இவர் இவர்களை விசாரித்த பின் 340 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் முத்தையாவிடம் சனிக்கிழமையன்று சமர்பித்தார்.
அறிக்கையை சமர்பித்த பின் நிருபர்களிடம் பேசிய மாதவன் கூறியதாவது:
என்னுடைய பணயில் 90 சதவிகிதம் முடிந்து விட்டது. மீதமுள்ள 10 சதவிகிதம் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகுறித்தி சி.பி.ஐ. குறை கூறியிருந்தததுதான். அது பற்றிய விவரம் இரண்டு நாட்களில் கிரிக்கெட் கிரிக்கெட்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
என் பணி நான் செய்த விசாரணையின் அடிப்படையிலான அறிக்கையை கொடுத்ததுடன் முடிந்து விட்டது.இப்பொழுதுதான் அறிக்கையை கொடுத்திருக்கிறேன். அதை முத்தையா படித்து முடிவெடுப்பார். அதற்கு முன்நான் எதையும் முன்கூட்டி சொல்ல விரும்பவில்லை என்றார்.
கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா கூறுகையில், கிரிக்கெட் வாரியம் குற்ற்ம் புரிந்தவர்கள் மீது வாழ் நாள்முழுதும் விளையாடக் கூடாது என்ற தடை போடுவது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுப்பது என்பதில் உறுதியாகஇருக்கிறது.
மாதவனின் அறிக்கை குறித்து நவம்பர் மாதம் 28-ம் தேதி கல்கத்தாவில் கூடவிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைகூட்டத்தில் விவாதிகக்கப்படும். அதில் எடுக்கப்பட்டு முடிவுகள் 29-ம் தேதி கூடும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்இறுதி முடிவுக்காக கொடுக்கப்படும்.
கிரிக்கெட் வாரியம் குறித்து சி.பி.ஐ. கூறிய குற்றச்சாட்டு குறிதது மாதவன் விசாரித்த பின் கொடுக்கும் அறிக்கைஅனைவருக்கும் தெரிவிக்கப்படும்.
சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும், சிறப்புபொதுக்குழுவின் முன்னும் ஆஜாராகும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றார்.