தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கம்யூனிஸ்ட் கட்சிகளின் மண்டல மாநாடு தஞ்சாவூரில் வரும் 28 ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சங்கரய்யா, மூப்பனார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இது தொடர்பாக வ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
வ.கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பரதன், செயலாளர் ராஜா, மேற்கு வங்க மாநில அமைச்சர் நந்தகோபால்பட்டாச்சாரியா, அசாம் மாநில அமைச்சர் வாசுதேவன் நாயர் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, வரும் 28 ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் மண்டல மாநாடு தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. மாநாட்டில், தேசிய அரசியல் குறித்தும், நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications