கொழும்பில் பள்ளி மீது குண்டு வீச்சு: 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் திரிகோண மலை அருகே ஒரு பள்ளிக்கூடத்தின் மீது வெள்ளிக்கிழமை ராக்கெட் குண்டு வீசப்பட்டதில் 2 மாணவர்கள் பலியானார்கள்.மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
இலங்கையில் வடக்கு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் திரிகோணமலை மாவட்டத்தில் முத்தூர் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது ராக்கெட் மூலம் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, இந்த மாவட்டத்தில் கோபாலபுரம் என்ற இடத்தில் தவறுதலாக முஸ்லீம்கள் 3 பேர் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுதவிர கல்பிதியா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு கடற்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. இதில் 2 மீனவர்கள்பலியானார்கள்.












Click it and Unblock the Notifications