கேரளா: ஐ.டி துறையில் ரூ. 22 பில்லியன் முதலீடு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் துறைகளில் அடுத்தசில மாதங்களில் ரூ. 22 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்யப்படும் என்று மாநிலமுதலவர் ஈ.கே.நாயனார் கூறியுள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்து கொண்டிருக்கும்ஐடிகேரளா-2000 கண்காட்சியில் நாயனார் சனிக்கிழமை பேசுகையில், இந்தமுதலீடுகள் மூலம் புதிதாக 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல ஆயிரம்பேர் மறைமுகமாக பயன் அடைவர்.

முதலீடுகள் தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்பட்டுக் கொண்டுள்ளன.ரிலையன்ஸ் தொழில் நிறுவனம், கேரள தொலைத் தொடர்பு கட்டமைப்பில் ரூ. 7பில்லியன் அளவுக்கு முதலீடு செய்கிறது.

இதுதவிர, ஆசியாநெட் ( ரூ. 5 பில்லியன்), ஜீ இன்டராக்டிவ், டிஷ்நெட், ஈஸ்கோடெல்( தலா ரூ. 2.5 பில்லியன்), பிபிஎல் பிராட் பேண்ட் நெட்வொர்க் (ரூ. 1.5 பில்லியன்),பார்தி டெலிசோனிக்ஸ் ( ரூ. 650 மில்லியன்) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடுசெய்துள்ளன.

இவற்றில், ரிலையன்ஸும், ஆசியாநெட்டும், மாநிலம் முழுவதிலும் ஆப்டிகல் பைபர்பதிக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன என்றார் நாயனார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+