யாழ். சண்டையில் இதுவரை 16,000 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையிலான மோதலில், இதுவரை 16,000 புலிகள்கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு முதல் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்துடன் போர் புரிந்து வருகின்றனர். 17ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மோதலில், 63,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 16,000 விடுதலைப் புலிகளும்கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர்கள் வாரம் இந்த மாதம் 21-ம் தேதி முதல் விடுதலைப்புலிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னி, மட்டக்களப்பு பகுதிகளில்விடுதலை ப் புலிகளின் கொடி ஏற்றப்பட்டு பிரபாகரனின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போரில் இறந்த புலிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் வாரத்தின் நிறைவு நாளான29-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடையே உரையாற்றுகிறார்.